வறண்டு கிடக்கும் போரூர் ஏரியை மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக தூர்வார வேண்டும், நடைபாதை ஏற்படுத்த வேண்டும் என போரூர் ஏரி பாதுகாப்பு மக்கள் குழு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஏரி பாதுகாப்புக்குழு தலைவர் க.பீம்ராவ், செயலாளர் தண்டபாணி, பொருளாளர் மங்களா நகர் நடராஜன், நிர்வாகிகள் ஜனா, எம்.நடராஜன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.