விற்பனை செய்யும் பகுதி விற்பனை தடை செய்யப்பட்ட பகுதி என்பதை வியாபாரிகளின் அனுமதியோடு செயல்படுத்த வேண்டும். நகர விற்பனைக் குழுவிற்கு ரிப்பன் மாளிகை வளாகத்தில் அலுவலகம் ஒதுக்க வேண்டும், வியாபாரிகளுக்கான குறை தீர்ப்புக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (டிச.5) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனிடம், சென்னை மாநகர் சிறுகடை வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம்.வி.கிருஷ்ணன் மனு அளித்தார். கூட்டமைப்பின் துணைத் தலைவர்கள் முஸ்தபா, முகம்மது, இணைச் செயலாளர்கள் மலைராஜன், மணிமாறன், நகர விற்பனைக் குழு உறுப்பினர்கள் சித்ரா, மோனிஷா ஆகியோர் உடன் உள்ளனர்.