ரூ.30 லட்சம் இழப்பீடு கோரி மனு
ரயில்நிலைய கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த போது பலி
இராமேஸ்வரம் ரயில்நிலையத்தில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த போது மனு தாரரின் கணவர் இறந்ததற்கு, ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் மனு தாக்கல் செய்தார். இளையாங்குடி ரசூலா சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பாதாம்பிரியாள் என்ப வர் தாக்கல் செய்த மனுவில், நான் அருந்த தியர் வகுப்பைச் சேர்ந்தவள். எனது கனவர் பெயர் பாலு, எங்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு மூன்று மாதங்கள் எனது கணவர் இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தார். கட்டிட வேலை மற்றும் செப்டிக் டேங் சுத்தம் செய்யும் வேலையை செய்து வந்தார். பணியின் போது ரயில்வே நிர்வாகத்தி னர் கணவருக்கு எவ்வித பாதுகாப்பு உப கரணங்களும் கொடுக்காமல் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்ய சொல்லியுள்ள னர். 16.11.2024 அன்று காலை 9 மணியள வில் எனது கணவர் வழக்கம் போல் முனிய சாமியுடன் வேலைக்கு சென்றார். இராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேசன் கட்டிட வேலை நடக்கும் இடத்திலுள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்ததாகவும், அப்போது எனது கணவர் மயக்கமாக இருப்பதாக கூறியதால் அவரை இராமேஸ் வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், எனது கணவர் இறந்துவிட்டதாக கூறியதாகவும் என்னிடம் தெரிவித்தார். புகாரின் பேரில் இராமேஸ்வரம் டவுன் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்படது. அதன் பின் எந்த முன்னேற்ற மும் இல்லை. எனவே வழக்கின் குற்றப்பிரிவுகளை மாற்றி எஸ்சி/எஸ்டி மற்றும் கையால் மலம் அள்ளும் தடைச் சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். மனுதாரரின் கணவர் இறந்ததற்கு, கையால் மலம் அள்ளும் தடை தட்டத்தின் படி ரூ.30 லட்சம் இழப்பீடு மற்றும் பிற நிவா ரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார். இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் மனு குறித்து, ஆதி திரா விடர் நலத்துறை செயலாளர், இராமநாத புரம் மாவட்ட ஆட்சியர், மதுரை மண்டல மேலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை யை ஒத்திவைத்தனர்.