tamilnadu

img

திருநாவலூர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கும் இயக்கம்

தமிழக சட்டமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களுக்கு மாத ஊதியத்தை உயர்த்தி 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்ததை அரசு ஆணையாக வெளியிடக் கோரி புதனன்று (மே 27) திருநாவலூர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த இந்தப் போராட்டத்தில் சிஐடியு கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.குமார், ஒன்றியச் செயலாளர் ஜே.ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;