tamilnadu

img

பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டாட்சிபுரம், அடுக்கம், கீழ்வாலை, மேல்வாலை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களுக்கு நூறு நாள் வேலை வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாநிலக் குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் வரும் வியாழக்கிழமை முதல் வேலை வழங்குவதாக உறுதி அளித்தனர், இதில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைச்செயலாளர் சு.வேல்மாறன், மாவட்ட துணைத் தலைவர் பி.முருகன்முத்துவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.