tamilnadu

img

தேநீர் கடைகளுக்கு அனுமதி.... முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் நன்றி....

சென்னை:
மார்க்சிஸ்ட் கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று தேநீர் கடைகளை திறக்க அனுமதி அளித்த தமிழக முதலமைச்சருக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தேநீர் கடைகளை திறக்க, இதர கடைகளில் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வேண்டுகோள் விடுக்கப் பட்டது. இந்நிலையில் தேநீர் கடைகளுக்கு அனுமதி அளித்து ஞாயிறன்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதை வரவேற்றுள்ள கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதல்வருக்கு நன்றி தெரி வித்துள்ளார்.

;