tamilnadu

img

பெரியார் 142ஆவது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

சென்னை:
தந்தை பெரியார் 142ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச் சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகத் தலைவர் மரியாதைசென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைப் பீடத்திலும், நினைவிடத்திலும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் காப்பாளர் க.பார்வதி, முனைவர் ஜானகி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.  பெரியார் சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மலர் வெளியீடு
இதையடுத்து தந்தை பெரியார் நினைவிட நுழைவாயிலில் திராவிட வரலாற்றுக் கல்வெட்டு அருகே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு ‘விடுதலை’ மலரை வெளியிட்டார்.சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.

;