tamilnadu

img

சென்னை: மாற்றுத்திறனாளிகள் கைது

நூறு நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்த வந்தவர்களை கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே காவல்துறையினர் கைது செய்தனர்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் உள்ள முறைகேடுகளையும், சட்டத்திற்கு மாறாக நடத்தப்படுவதையும் கண்டித்து செவ்வாயன்று (மே 17) சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள ஊரக வளர்ச்சி ஆணையர் அலுவலகம் முன்பு காத்திருப்ப போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்தது.

இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு மாற்றுத்திறனாளிகள் வந்தனர். கோயம்பேடு பேருந்து நிலையம் வழியாக பேருந்தில் வந்த 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறை கைது செய்து அடைத்து வைத்துள்ளனர். இதனை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் முழக்கம் எழுப்பினர்.

காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி சைதாப்பேட்டையில் காத்திருப்பு போராட்டம் தொடங்கி உள்ளது. அதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்
 

;