tamilnadu

img

புறவழிச்சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் அவதிப்படும் மக்கள்!

புறவழிச்சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் அவதிப்படும் மக்கள்!

விழுப்புரம், மே 29 -  விழுப்புரத்தில் உள்ள முத்தாம் பாளையம் அருகே புறவழிச்சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவ தால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். விழுப்புரத்தில் உள்ள திருச்சி-சென்னை புறவழிச்சாலையில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் விழுப்புரம் பகுதியில் உள்ள வீடுகள், பெட்டிகடைகள், ஓட்டல் மற்றும் இறைச்சி கடை கள் உள்ளிட்டவற்றில் சேகரிக்கப்  படும் குப்பைகளை ஊருக்கு வெளிப்பகுதியில் கொண்டு சென்று கொட்டாமல், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நட மாட்டம் அதிகம் உள்ள திருச்சி-சென்னை புறவழிச்சாலை முத்தாம்பாளையம் முருகன் கோவில் அருகே சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகளை உடனுக்கு டன் அள்ளி அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. அப்படியே அங்கு குவியும் குப்பைகளை அப்புறப்படுத்தினாலும் மீண்டும் அதே இடத்தில் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக அங்கு துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளித்தும் குவிந்து கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றி இரும்பு தடுப்பு வேலி அமைத்து அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்கவில்லை. மேலும் குவிந்து கிடக்கும் குப்பைகளில் பன்றிகள், நாய்கள் மேய்வதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அவ்வழியே அன்றாடம் சென்று வரும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டி களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்றுவதோடு, அங்கு மேற்கொண்டு குப்பைகள் கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.