tamilnadu

மக்கள்ஒற்றுமை மேடை நடத்தும் மதநல்லிணக்க கட்டுரைப் போட்டி

சென்னை, ஆக.3 மதநல்லிணக்க மாநில மாநாட்டினை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில்நடத்தவுள்ளது. மாநாட்டின் ஒரு பகுதியாக கட்டுரை போட்டி இடம் பெறுகிறது. பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு இரு பிரிவுகளாக இந்தப்போட்டி நடைபெறும். 11 முதல் 12 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் கல்லூரி மாணவர்களுக்க மற்றொரு பிரிவாகவும் இந்தபோட்டிகள் நடைபெறும். கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் வரவேற்கப்படுகின்றன. தலைப்பு: மத நல்லிணக்கம் பேணி, மனித நேயம் காப்போம் Humanitarian Love  Through Religious Harmony கட்டுரை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 20. கட்டுரைகள் உங்கள் சொந்தக் கருத்து களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். கையெழுத்துப் படியாகவோ அல்லது தட்டச்சு செய்யப்பட்டதாகவும் இருக்கலாம். அதிகபட்சமாக 6 பக்கங்கள் மட்டுமே இருக்கவேண்டும்.
பரிசுத் தொகை
பள்ளி மாணவருக்குமுதல் பரிசு ரூ 10000, 2வது பரிசு ரூ 5000. ஆறுதல் பரிசு தலா 3 பேருக்கு  தலா ரூ.2000. கல்லூரி மாணவருக்கு முதல் பரிசு ரூ 10000 இரண்டாம் பரிசு ரூ 5000ஆறுதல் பரிசு தலா 3 பேருக்கு  ரூ 2000. கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி: சுப்பையா முத்துகுமாரசாமி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, 522, டி.டி.கே  சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 தொடர்பு எண்: +91 6381864234 , +91 98846 84666