tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டு மக்கள் மோடியை நம்பமாட்டார்கள்

தொல்.திருமாவளவன் பேட்டி

தூத்துக்குடி, பிப்.29- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தனியார் நிகழ்ச்சி யில் பங்கேற்பதற் காக தூத்துக்குடி வந்தார். அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “தமிழகம் வந்த பிரத மர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் பாஜக  செய்த சாதனை குறித்தோ, இந்தியா வின் வளர்ச்சி குறித்தோ பேசவில்லை. பாஜக-வின் கொள்கைகள் குறித்தும் பேசாமல், திமுக, காங்கிரஸ் கட்சிகளை  விமர்சித்துள்ளார். எம்.ஜி.ஆர், ஜெய லலிதா போன்றோரைப் புகழ்ந்து பேசி யிருக்கிறார். இதன்மூலம் மோடி தன்னை யும், தன் மீதான செல்வாக்கையும் நம்பா மல், தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெய லலிதாவை நம்பித்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டார்.

தூத்துக்குடியில் நடந்தது அரசு விழா  என்பதை மறந்துவிட்டு, திமுகவை கடு மையாக விமர்சித்து பேசியுள்ளார். மக்க ளவையில் அவர் கடைசியாக ஆற்றிய உரையும் அப்படித்தான் இருந்தது அவ ருடைய பொறுப்புக்கு இது அழகல்ல. தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை மோடி  வந்தாலும், அவரை மக்கள் நம்பமாட் டார்கள். மோடி வருகையில் பாஜக விற்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு உரு வாகாது. வரும் தேர்தலில் தமிழ்நாட்டில்  திமுக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளி லும் வெற்றி பெறும்.” இவ்வாறு திருமா வளவன் கூறியுள்ளார்.

தமாகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அசோகன்
சென்னை, பிப்.29- பாஜக கூட்  டணியில் தமிழ்  மாநில காங்கிரஸ்  கட்சி இணைந் துள்ளதாக அக்  கட்சியின் தலை வர் ஜி.கே.வாசன் அறிவித்த நிலையில், அதற்கு சொந்  தக் கட்சிக்கு உள்ளேயே கடும் எதிர்ப்பு  எழுந்தது. குறிப்பாக, தமிழ் மாநில காங்கி ரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலா ளர் டி.என். அசோகன் தமாகா-விலிருந்து  விலகினார். இந்நிலையில், அவர் தற்  போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்  ளார். இது ஜி.கே. வாசனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.