சென்னை
சொந்த மற்றும் வெளிநாட்டுப் பயணிகளால் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது ஆட்டத்தைத் துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ள நிலையில், தமிழக மக்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் (சுருக்கம்) :
* கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம்.
* 15 நாட்களுக்கு பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* எல்லையோர மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்களை மார்ச் 31 வரை மூட வேண்டும்.
* கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு நோயாளிகள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம்.
* வீட்டிற்குள் நுழையும்போதும், அவ்வபோது கைகளைச் சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும்.
* தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி,. முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை
* வழிபாட்டுத் தலங்களுக்கு வருவோரைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஊடகங்களுக்குத் தெரிவிக்க சுகாதாரத்துறை அமைச்சருக்கு உத்தரவு
* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு