சென்னை, ஜூலை 17 - சென்னை நேப்பியர் பாலம் முழுவதும் சதுரங்க கட்டங்களை (செஸ் போர்ட்) போல வண்ணம் பூச பட்டுள்ளது. இதனால் பாலத்திற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று பார்த்து, ‘செல்பி’ எடுத்து மகிழ் கின்றனர். இந்தியவில் முதல் முறையாக மாமல்ல புரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டி யில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். உலகின் முன்னணி வீரர்கள் உட்பட வளர்ந்து வரும் வீரர்கள் வரை பங்கேற்கும் மௌன யுத்தமாக இந்த போட்டி கள் அமையும். போட்டிகளில் சர்வதேச வீரர்கள் கலந்து கொள்வதால், முதலமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரை உள்ளடக்கி சிறப்பு குழு அமைத்து அரங்கங்கள் உள் ளிட்ட ஏற்படுகள் செய்யப்பட்டு வருகிறது.
செஸ் ஒலிம்பியாட்டை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்து வருகிறது. சதுரங்கத்தில் உள்ள குதிரை, ராஜா, ராணி போன்ற வடிவங்களை சாலைகளில் மத்தியில் அமைத்து, ‘நம்ம செஸ், நம்ம சென்னை’ என்ற பெயரில் விளம்பரம் செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு தயாரித்த ‘வெல்கம் டூ நம்ம ஊரு' என்ற டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த விளம்பர படம் நேப்பியர் பாலத்தில் படமாக்கப்பட்டது. இதற்காக பாலம் முழுவதும் செஸ் போர்டில் உள்ள கருப்பு, வெள்ளை நிற கட்டங்களாக வண்ணம் பூசப்பட்டது. மேலும், வண்ண விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டிருக்கும் நேப்பியர் பாலம் தற்போது செஸ் போர்ட் போல் கூடுதல் அழ கோடு காட்சியளிப்பதால் ஏராளமான மக்கள் ஆர்வத்தோடு வந்து செல்பி எடுத்து உற்சாக மாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரு கின்றனர். விளம்பர பலூன் இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒலிம்பியாட் விளம்பர பலூனை ஆட்சியர் அமிர்த ஜோதி பறக்க விட்டார். இந்நிகழ்வில் மாவட்ட வரு வாய் அலுவலர் ஏ.ஆர்.ஏ.ஜெயராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பா.கியூரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் ஆ.இளங்கோ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.