காட்பாடி, பேர்ணாம்பட்டு தாலுகாக்களில் மக்கள் சந்திப்பு இயக்கம்
வேலூர், ஜூன் 19 - மோடி அரசின் மதவெறிக்கு எதிராகவும், மக்கள் விரோத கொள்ளைகளை எதிர்த்தும், தமிழக அரசு மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காட்பாடியில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் தாலுக்கா குழு உறுப்பினர் லோ.நவீன் தலைமையில் நடை பெற்றது. தாலுகா செயலாளர் ஆர்.சுடரொளியன்,மாவட்ட குழு உறுப்பி னர்கள் பெ.திலீபன் எம்.கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விசிக மாநகர மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப் பங்கேற்று வாழ்த்தி பேசினார்.நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.சீனி வாசன் பிரச்சாரத்தை நிறைவு செய்து பேசினார். விருதம்பட்டில் தொடங்கிய பிரச்சாரப்பயணம் டி.கே.புரம் கூட்ரோடு, இபி காலனி, கழிஞ்சூர் மற்றும் பேருந்து நிறுத்தம், சில்க்மில், மண்டபம் பேருந்து நிறுத்தம், பெரி யார் சிலை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி அனைத்து பகுதிகளி லும் சாலைகளை சீரமைக்க வேண்டும், கழிஞ்சூரில் மூடப்பட்ட துணை சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும், மாநகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்துவதோடு, மாநகர போக்குவரத்து கழகத்தை உருவாக்க வேண்டும். மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தை காவல்துறை முற்றிலுமாக தடுக்க வேண்டும், ரேசன் கடைகளில் நேரத்தை விரயம் செய்யும் டிஜிட்டல் பதிவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம்செய்தனர். பேர்ணாம்பட்டு பேர்ணாம்பட்டு கமிட்டி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் தாலுகா செயலாளர் சி.சரவணன் தலைமையில் நடைபெற்றது. பிரச்சாரத்தை மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி துண்டுபிரசுரங்களை வழங்கி துவக்கி வைத்தார். மாவட்டசெயற்குழு உறுப்பி னர் கே.சாமிநாதன் மாவட்டக்குழு உறுப்பினர் பி.குணசேகரன் வட்டக்குழு உறுப்பினர்கள் பாஸ்கர் கலந்து கொண்டனர். பேர்ணாம்பட்டு பங்களாமேடு பகுதியில் துவங்கி கூட்ரோடு, நகராட்சி அலுவலகம், இறுதியாக பேருந்து நிலையம் அருகே நிறைவுபெற்றது. பிரச்சார இயக்கத்தில் பேர்ணாம் பட்டு பேருந்து நிலையத்தை விரி வாக்கம் செய்ய வேண்டும்,நகரின் அனைத்து வார்டுகளிலும் அடிப்படை தேவைகளான குடிநீர், கால்வாய் வசதிகளை ஏற்படுத்தி தருவதோடு அனைத்து சாலைகளையும் செப்பனிட்டு சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தனர்.