சென்னை, ஆக. 22 - அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறு வனங்களும் கல்விக்கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், ஊர டங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் உயர்க்கல்வி நிறுவனங்கள் நடப்பு ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை உடனடியாக, மொத்தமாக செலுத்த வேண்டும் என்ற அறிவித்துள்ளன. உலக நாடுகள் கல்விக் கட்ட ணத்தை குறைக்க பரிசீலித்து வருகிற நிலையில், தமிழகத்தில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங் கள் கட்டாய கட்டண வசூ லிப்பில் ஈடுபட்டு வருவது மனிதாபி மானமற்றது. கல்விக் கட்டணம் செலுத்த தாமதமானால் எந்தவித மான அபராதத் தொகையையும் வசூலிக்க கூடாது என அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்க ளுக்கும் தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.