கடலூர், ஆக. 23- மூத்த குடிமக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மூத்தகுடி மக்கள், அகிலபாரத மூத்த குடிமக்கள் சங்கம் இணைந்து நடத்திய கூட்டத்தில் பொதுச்செயலர் எம்.மருதவாணன், நிர்வாகிகள் காசி நாதன், வெங்ட்ரமணி, மூத்த குடிமக்கள் சங்கத்தின் தலைவர் சிவ ராமன், செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
ரயில்வேயில் ரத்து செய்யபட்ட மூத்தகுடி மக்களுக்கான சலுகைகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும், எல்லா பிரதான சாலைகளிலும் முதிய வர்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல நடைபாதை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட தலைநகரங்களிலும் முதிய வர்களுக்கு தனி மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டும். 60 வயதை கடந்த அனைவருக்கும் அரசு ஒய்வூதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். 60 வதை கடந்த முதியவரின் இணையர் இறந்து விட்டால் குடும்ப ஓய்கூதிய முறைப்படி உயிரோடு இருப்பவர்க்கு இறந்தவர் ஓய்கூதியமும் சேர்த்து வழங்க வேண்டும். முதியவர்கள் உயில் செட்டில்மெண்ட் ஆகியவை பதிவு செய்யும் போது 50 விழுக் காடு பதிவுக் கட்டணத்தில் பதிவு செய்யவேண்டும். எல்லா பஞ்சாயத்துகளிலும் மாதம் ஒருமுறை மூத்த குடிமக்களுக்கு மருந்து களுடன் கூடிய இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழே உள்ள முதிய வர்கள் இறந்து விட்டால் ஈமச்சடங்கு செலவை அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.