tamilnadu

img

ரயில்களில் தண்ணீர் இல்லாமல் பயணிகள் திண்டாட்டம்

சென்னை, மே. 6- வெயிலின் தாக்கம் ரயில்வே துறையிலும் எதிரொலிக்கிறது. கோடை விடுமுறை காரண மாகவும், வெயில் காரணமாகவும் சென்னை யிலிருந்து பொதுமக்கள் சொந்த ஊர்க ளுக்கும், கோடை சுற்றுலாவும் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இதனால் அனைத்து ரயில்களும் நிரம்பி வழிகின்றன. அனைத்து ரயில்களிலும் டிக்கெட் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி ப்படுகிறார்கள். அதே நேரம் தண்ணீர் கிடைக்காமல் ரயில்கள் திண்டாடுகின்றன. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து தொலை தூரங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நிரப்புவதற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் குறைந்து விட்டதால் தனி யார் தண்ணீர் லாரிகள் தேவையான அளவு சப்ளை செய்ய முடியாததால் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாமல் திணறு கிறார்கள். வார நாட்களில் 50 விழுக்காடு, வார இறுதி நாட்களில் 75 விழுக்காடு தண்ணீர் நிரப்பினார்கள். இப்போது வார நாட்களில் சுமார் 25 விழுக்காடு தான் தண்ணீர் நிரப்பப் படுகிறது. இதனால் கழிவறைகளில் தண்ணீர் பயன்படுத்த முடியாததால் துர்நாற்றம் வீசு கிறது.

இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரி கள் கூறுகையில், தண்ணீர் பிரச்சனையை உரிய முறையில் கண்காணித்து வருவதாக வும் ஒரு சில நீண்ட தூர ரயில்களுக்கு வேறு ரயில் நிலையங்களில் தண்ணீர் நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர ரயில் பெட்டிகள் சுத்தப்படுத்துவதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்ற னர்.

ஒரு ரயில் நீண்ட தூரம் சென்று வர 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்த தட்டுப்பாடு காரணமாக ரயில் பெட்டி களின் வெளிப்புறம் கழுவுவதற்கு தண்ணீர் கொடுக்கவில்லை. சென்னை பேசின் பிரிட்ஜ், பராமரிப்பு நிலையத்தில் 45க்கும் மேற்பட்ட ரயில்கள் பராமரிக்கப்படுகிறது. இதற்கு நாள் ஒன்றுக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை ப்படும். சென்ட்ரலுக்கு சுமார் 10 லட்சம் லிட்டர், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு 10 லட்சம் லிட்டர் தேவைப்படும். ஆனால் தண்ணீர்  தேவையை சமாளிப்பது மிகப்பெரிய சவா லாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.