சென்னை, பிப். 13 - திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று, சாதனை படைத்துள் ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்வரும் இளம்பெண் ஸ்ரீபதிக்கு வாழ்த்தும் - பாராட்டும் தெரிவித்துள்ளார். “திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி 23 வய தில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்
. பெரிய வச திகள் இல்லாத மலைக் கிராமத்தை சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒரு வர் இளம் வயதில் இந்நிலையை எட்டி யிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடை கிறேன். அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர் களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரி மை எனக் கொண்டு வந்த அரசாணை யின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்.
சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மன மில்லாமல் தமிழகத்தில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில் என்று ‘எக்ஸ்’ பக்கத்தில் குறிப்பிட் டுள்ளார்.
“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும்பெண் களைக் கற்கவைப் பீரே! இற்றை நாள் பெண்கல்வி யாலே, - முன்னேற வேண் டும்வைய மேலே!” என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.