tamilnadu

img

பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றம்

சிபிஎம் வரவேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தை ஆளுநர் மேற்கொள்ளும் முறையை மாற்றி, தமிழ்நாடு அரசே அந்த நியமனங்களை மேற்கொள்ளும் என்ற மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தில், ஆளுநர் தலையீடு செய்யும் போக்கு, அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய ஆளும் கட்சியின் முகவராகவே செயல்படுகிறார். அதனால், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களையும் சட்டத் திருத்தங்களையும் நிறுத்தி வைப்பது, முடக்குவது,

 மாநில அரசைப் புறக்கணித்து உயர்கல்வி நிறுவனங்களில் தலையிடுவது போன்ற அத்துமீறல்களை வெளிப்படையாகவே மேற்கொள்கிறார். இப்போது கூட, அரசின் இசைவில்லாமலேயே துணை வேந்தர்கள் மாநாட்டை தமிழக ஆளுநர் கூட்டியுள்ளார். சில மாதங்களுக்கு முன் தென் மாநில துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசும்போது, ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை வலியுறுத்தி, அதற்காக கண்டனத்திற்கு ஆளானார். எனவே தமிழ்நாடு அரசு, மாநில உரிமையை வற்புறுத்தும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கத்துடனும் கொண்டு வந்திருக்கும் சட்ட மசோதாவை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்கள். குஜராத் உள்ளிட்டு பல மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைப்பாடே பாஜக-வின் அணுகுமுறையில் வெளிப்படுகிறது.

அதனை வழிமொழியும் விதத்தில் அதிமுகவும் வெளிநடப்பு செய்துள்ளது  ஏற்கத்தக்கதல்ல. அரசியல் சுயநலத்திற்காக, மாநில உரிமைகளைக் கைவிடுகின்ற சந்தர்ப்பவாத போக்கு கண்டனத்திற்குரியது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் நீடிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன. மேலும், பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படும் நிலைமை தொடருமானால் அது உயர்கல்வித்துறையில் தலையீடுகள் தொடர்வதற்கே வழிவகுக்கும். எனவே, பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படும் ஏற்பாட்டையும் மாற்றியமைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

சென்னை, ஏப்.25- பல்கலைக்கழக துணைவேந்தர் களை மாநில அரசே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவை யில் திங்களன்று (ஏப்.25) கொண்டு வரப்பட்ட சட்ட முன்வடிவு ஒருமன தாக நிறைவேறியது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே அண்மைக் காலத்தில் முரண்பாடு முன்னுக்கு வருவதைத் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம்  உள்ளிட்ட  மாநிலங் களில் காணமுடிகிறது.  கடந்த காலத்தில் புதுச்சேரி அரசு இதனைக் கடுமையாக சந்தித்தது. குறிப்பாக, சட்டப்பேரவையில் ஆளு நர் உரை, பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம், மாநில அரசு உருவாக்குகிற சட்டம் அல்லது சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் முடக்குதல் போன்ற நடவடிக்கை களில் இந்த முரண்பாடு நீடிக்கிறது. எனவே, பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை அகற்றும் சட்டத்திருத்தத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த  மாதம் வலியுறுத்தியிருந்தது. இதர பல கட்சிகளும் வலியுறுத்தின.

இந்த நிலையில், தமிழ்நாடு  சட்டப்பேரவை திங்களன்று(ஏப்.25) கேள்வி நேரம் முடிந்ததும், “தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழ கங்களின் துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிப்பதற்கான மசோதாவை’’ சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சட்ட மசோதா எதற்காக கொண்டு  வரப்படுகிறது என்பதைவிளக்கினார். ‘‘சென்னை பல்கலைக்கழகம் உள்பட 13 பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து அரசுக்கு மாற்றப்படுகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசு நிய மிக்க முடியாமல் இருப்பது உயர் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற் படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடு க்கப்பட்ட ஆட்சியால் துணைவேந்தர் களை நியமிக்க முடியாமல் இருப்பது மக்களாட்சி தத்துவத்துக்கு  எதி ரானது’’ என்று முதல்வர் கூறினார். தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த  மசோதாவில், ‘வேந்தர்’, ‘அவர்’ எனும் சொற்றொடர்கள் ‘அரசு’ (முத லமைச்சர்), ‘அவர்கள்’ என்றும் மாற்றப் படுகிறது. வேண்டுமென்றே செயல் படாமல் இருப்பது, அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் அரசாணை மூலம் துணைவேந்தரை நீக்கம் செய்யவும் சட்டத் திருத்தத்தில் வழி வகை செய்யப்படுகிறது. அத்துடன், உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது அரசு தலைமைச் செயலாளர் படிநிலைக்கு குறையாத அரசு அலுவலராக இருக்கும், இருந்துள்ள நபரைக் கொண்டு ஒரு விசாரணை ஆணை யம் அமைக்கவும் உத்தரவிடப்படும். அந்த ஆணையம், துணைவேந் தருக்கு விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கும்” என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்திலேயே (குஜராத்) துணை வேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநி லங்களில் துணைவேந்தரை நிய மிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம் யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள், பாமக, மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரி வித்ததால் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.  இந்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், விவாதத்தில் பங்கேற்பதற்கு முன்பாக அதிமுக வினரும் வெளி நடப்பு செய்தனர்.