tamilnadu

img

பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமானது அல்ல தற்காலிகமானதே  

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. அந்த பணி முற்றிலும் தற்காலிகமானது என்பதை பணி நியமன ஆணையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த ஆசிரியர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எந்த நேரத்திலும் பணி நீக்கம் செய்யப்படலாம். பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் என்பது அரசு பணியிடங்கள் இல்லை. அந்த அடிப்படையில் அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு விடுமுறை காலத்திற்கான அதாவது மே மாதத்திற்கான சம்பளம் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;