tamilnadu

img

சென்னையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை துவங்கியது 

ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனை சென்னையில்  உள்ள மருத்துவமனைகளில் துவங்கியுள்ளது.

சென்னை போரூர்  ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் இந்த மருந்தை தயாரிக்கவும், பரிசோதனைகளை நடத்துவதற்கு புனேயில் இயங்கி வரும் சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு இரண்டு நிறுவனங்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளது.

தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகளை பிரிட்டனில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனையில் ஒரு பெண்ணுக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டதால், சோதனைகள் தற்காலிகமாக திருத்தப்பட்டது. தற்போது மீண்டும் பரிசோதனை உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த சோதனை சென்னையில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. 16 இடங்களில் இந்த தடுப்பூசி பரிசோதனை நடத்தப்படவுள்ளது.