இரட்டை இலை எங்களுக்கே!
தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்
சென்னை, மார்ச் 16- 18-ஆவது மக்கள வைத் தேர்தலில் தமிழ கத்தில் போட்டியிடும் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலை மைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல் வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டனர். இது குறித்து நடந்து வந்த வழக்குகளில் அதிமுக கட்சி,பெயர், சின்னம் ஆகியவை எடப்பாடி பழனிசா மிக்குச் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப் பட்டது.
இதனைத் தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி யை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து கட்சி, சின்னம் ஆகிய வற்றை பயன்படுத்த அவருக்கு அனு மதி வழங்கியுள்ளது. ஓபிஎஸ்- க்கு கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை பயன் படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக ஓபிஎஸ் தொட ர்ந்து கூறி வருகிறார்.
ராகுலின் நீதிப் பயணம்
நிறைவு பொதுக்கூட்டம்
முதல்வர் இன்று மும்பை பயணம்
சென்னை, மார்ச் 16 - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் தெற்குப்பகு தியான கன்னியாகுமரியில் இருந்து கடந்த 2022-ஆம் ஆண்டு’ இந்திய ஒற்று மைப் பயணத்தை’ துவங்கினார். இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தப் பயணம் வடமாநிலங்களைக் கடந்து காஷ்மீரில் நிறைவுற்றது.
அதன் இரண்டாம் கட்டமாக 2024 ஜனவரி 14 அன்று, நாட்டின் கிழக்குப் பகு தியான மணிப்பூரில் ‘இந்திய ஒற்றுமை மற்றும் நீதிப் பயணத்தை’ துவங்கிய ராகுல் காந்தி, அதனை மேற்குப் பகுதி யான மகாராஷ்டிர மாநிலம் மும்பை - தாதரிலுள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் மார்ச் 17 அன்று நிறைவு செய்கிறார். இதை யொட்டி, மும்பை சிவாஜி பார்க்கில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடை பெறுகிறது.
காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்தி ருக்கும் இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில், மும்பை பொதுக்கூட் டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக் கிழமை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த தும் ஞாயிற்றுக்கிழமை இரவே அவர் சென்னை திரும்புகிறார்.
தேமுதிக யாருடன்?
பிரேமலதா விளக்கம்
சென்னை, மார்ச் 16- தேமுதிக அதிமுகவுடனும் பாஜக வுடனும் மக்களவைத் தேர்தல் உடன்பாடு குறித்துப் பேசிவருகிறது. தமது கட்சியை எதில் ஐக்கியமாக்குவது எனத் தெரியாமல் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சனிக்கிழமை காலை வெளியிட்டுள்ள அறிக்கை: “ கூட்டணி குறித்து செய்திகள் தலைமை கழகம் அறிவிக்கும் அறிவிப்பு மட்டுமே உண்மையானது. நாடாளுமன்றத் தேர் தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படை யில் வெளிவருகிறது. தலைமைக் கழ கம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியா னது.” என்று விளக்கமளித்துள்ளார்.
அதிமுக - பாஜக இடையே ‘அரைவேக்காடு சண்டை’
மதுரை, மார்ச் 16- எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை “அரைவேக்காடு” என விமர்சித் துள்ளார். இல்லை இல்லை அண்ணா மலை தான் “அரைவேக்காடு” என்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ. இது தொடர்பாக செல்லூர் ராஜூ மதுரையில் சனிக்கிழமை அளித்த பேட்டி: “நேற்று வரை ஒன்றுமே தெரியா மலிருந்த அண்ணாமலை தான் அரசிய லில் அரைவேக்காடு. மக்களவைத் தேர் தல் முடிந்து வாக்குப்பெட்டியை திறந்து பார்க்கும் போது தான் தெரியும் தமிழக மக்கள் பாஜக-வுக்கு அடித்துள்ள ஆப்பு. ஆளுங்கட்சியில் பணத்தைக் காட்டி மிரட்டி கூட்டத்தை சேர்த்தால் மட்டும் போதுமா?” என்றார்.
தேர்தலுக்குப் பின்னர் தான் தெரி யும் அண்ணாமலை இருப்பாரா? தொடர் வாரா? என்று. பாஜக தலைவர் இது போன்ற விமர்சனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.