tamilnadu

நிலைகுலைகிறது பாஜக சிபிஐ பொதுச் செயலாளர் து. ராஜா பேட்டி

சென்னை, ஏப். 8 - பாஜகவிற்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய அள வில் எதிர்ப்பலை எழுந்திருக் கிறது என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் து. ராஜா தெரிவித்தார். சென்னையில் திங்களன்று (ஏப்.8) செய்தியாளர்களிடம் து. ராஜா கூறியதாவது:

வடமாநிலங்களிலும் மோடிக்கு எதிர்ப்பு 
மோடியின் பொய், புரட்டு அரசியலுக்கு எதிராக நாடு  முழுவதும் மக்களிடையே கொந் தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் களம் தீர்மானகர மான நிலைக்கு வந்துள்ளது. வட மாநிலங்களிலும் பாஜக நிலை குலைந்து வருகிறது.  எனவே, பாஜகவினர் நிதான த்தை இழந்து பேசுகின்றனர். இந்தியா கூட்டணி வெற்றி யைத் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற உ.பி., உள்ளிட்ட  மாநிலங்களிலேயே வீழ்ச்சியடைய உள்ளது. தென் மாநிலங்களில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. 400 இடங்களில் வெற்றி பெறு வோம் என்பதெல்லாம் வாய்ச் சவடால். மக்கள் மனோநிலை யை கபளீகரம் செய்யும் உத்தி.  இவ்வாறு து. ராஜா கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை சிதைப்பு
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “தேர்தல் ஆணை யத்தின் நடுநிலையை, பாஜக சிதைத்து வருகிறது. பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்தி ரன் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் மிகுந்த, ஒழுக்க நெறியற்ற, அரசியல் நெறி யற்ற கட்சியாக பாஜக உள் ளது. தேர்தல் நேரத்தில் அரசி யல் கட்சிகளின் வங்கிக் கணக்குகளை முடக்குவது, அந்த கட்சியை செயலற்றதாக மாற்றிவிடும். இதை ஏற்க முடியாது. காங்கிரஸ் நீதி மன்றம் சென்றுள்ளது. இடது சாரிகளும் சட்டப்படியான நட வடிக்கை எடுப்போம்” என் றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மாநில துணைச் செயலாளர் மு. வீர பாண்டியன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.