திர்க்கட்சிகள் போராட்டம் எதிரொலி தவளக்குப்பம் காவலர்கள் இடமாற்றம் புதுச்சேரி, மே 28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டத்தால் தவளக்குப்பம் காவல் நிலைய அதிகாரி, காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூலித் தொழிலாளி அர்ஜுனன் உயிரிழப்பிற்கு காரணமான தவளக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முக சத்தியா, துணை உதவி ஆய்வாளர் சுரேஷ், காவலர் வசந்த ராஜா ஆகி யோர் புதுச்சேரி காவல்துறை ஆயுதப் பயிற்சி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் சுபம் கோஷ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சிபிஎம், சிபிஐ, சிபிஐ எம்.எல்., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் போராட்டத்தால் தவளக்குப்பம் காவல் நிலைய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்வு புதுச்சேரி, மே 28- புதுச்சேரி மாநிலத்தில் மது பானங்கள் மீதான கலால் வரியை அரசு உயர்த்தியுள்ளது. இதனால் மது பாட்டில்கள் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து, கலால் துறை துணை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஐஎம்எப்எல், பீர், ஒயின் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கலால்வரி மே 28 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு புதுச்சேரி அரசு கலால் துறையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உயர்வின் மூலம் ஐஎம்எப்எல் வகை 750 மி.லி. மதுபான பாட்டில்களுக்கு ரூ. 10 முதல் ரூ. 47 வரையும், 180 மி.லி. பாட்டில்களுக்கு, ரூ. 3 முதல் ரூ. 11 வரையும், பீர் 650 மி.லி. பாட்டில்க ளுக்கு, ரூ. 6 முதல் ரூ. 7 வரையும், ஒயின் 750 மி.லி. பாட்டில்களுக்கு, ரூ. 13 முதல் ரூ. 26 வரையும் குறைந்த பட்சம் உயர வாய்ப்புள்ளது. இந்த வரி உயர்வின் மூலம், புதுச்சேரி அரசுக்கு வருடத்திற்கு ரூ.185 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மதுபான தொழிற்சாலை, மதுபான மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கு உரிம கட்டணம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி மீதான கட்டணமும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு கலால் துறையின் இணையதளத்தில் பொது மக்களின் தகவலுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் திரைப்பட விழாவை தடைசெய்ய தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் வலியுறுத்தல் சென்னை, மே 28- பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் அரசு நடத்தும் திரைப்பட விழாவை தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. காசாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் கொன்றும், பட்டினிக்குள்ளாகி பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலின் நெதன்யாகு ஜியோனிஸ்ட் அரசு நரவேட்டையாடிவருகிறது. பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் ரத்தம் குடித்த இஸ்ரேலின் திரைப்பட விழாவை தமிழ்நாடு அரசு தடைசெய்யவேண்டும் என தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் தமிழ்நாடு முதல மைச்சரை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இனப்படு கொலை செய்யும் இஸ்ரேலிய பொருட்களை தமிழகத்தில் புறக்கணிக்கவேண்டும் என இயக்கத்தின் தலைவர் டாக்டர்.சி.எஸ்.ரெக்ஸ்சற்குணம், செயலாளர் ந.ஞானகுரு ஆகியோர் ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர். கஞ்சா விற்பனை: 6 பேர் கைது 21 கிலோ கஞ்சா பறிமுதல் கடலூர், மே 28 - கடலூர் மாவட்டம், புதுநகர் காவல் துறையினர் கண்ணாரப்பேட்டை மணல் குவாரி அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து 4 வாலிபர்கள் தப்பி செல்ல முயன்றனர். போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர், விசாரணை நடத்திய போது, சேடப்பாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஆகாஷ் (23), அன்னவெளியை சேர்ந்த கவியரசன் (23), சின்ன பிள்ளையார் மேட்டை சேர்ந்த ஐயப்பன் (24), கரை மேடு பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் பரத்குமார் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீ சார் அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறி முதல் செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் ஆந்திரா சென்று அங்கு பதுங்கியிருந்த இவர்களது கூட்டாளிகளை கைது செய்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
மண்சரிவு பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வீடு கோரிக்கை திருவண்ணாமலை, மே 28- கடந்த டிசம்பர் 1ஆம் தேதி பெஞ்சால் புயல் காரண மாக திருவண்ணாமலை மலையில் 4 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியாகினர். இந்த மண்சரிவால் வீடு இழந்த குடும்பங்களுக்கு செங்கம் சாலையில் உள்ள வைர குன்று மலை அருகே தகரக் கூரைகளால் தற்காலிக குடியிருப்பு அமைத்துத் தரப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், “தகரக் கூரை களின் கீழ் கடும் வெயிலிலும் மழையிலும் 6 மாதங்களாக அல்லல்படுகிறோம். தினசரி மழையால் அருகில் உள்ள மலைக் குன்றுகளில் இருந்து கற்கள் வந்து குடியிருப்பு களின் மீது விழுகின்றன. பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சி கள் குடியிருப்புக்குள் வருகின்றன. எனவே மக்கள் வாழும் பகுதியில் நிரந்தர பாதுகாப்பான வீடு அமைத்துத் தர வேண்டும்”என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.