சென்னை, பிப். 18 - 2024-25 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திங்களன்று (பிப்.19) தாக்கல் செய்கிறார். நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, வேளாண்மை நிதிநிலை அறிக்கையை அந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் செவ்வாயன்று (பிப். 20) தாக்கல் செய்கிறார்.
அன்றைய தினமே எதிர்வரும் நிதியாண்டின் செலவுக் கான முன்பண மானியக் கோரிக்கை கள் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்படுவதுடன், நிதிநிலை, வேளாண் அறிக்கைகள் மீதான பொது விவாதம் நடைபெறவுள்ளது. நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்கள் பிப்ரவரி 21 அன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் நடைபெறவுள்ளன.
காலையில் 10 மணிக்கும், மாலை யில் 4 மணிக்கும் பேரவை கூட வுள்ளது. நிதிநிலை, வேளாண்மை அறிக்கைகள் ஆகியவற்றின் மீதான பொது விவாதங்களுக்கு பிப்ரவரி 22 அன்று பதிலுரைகள் அளிக்கப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களான தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் நிதிநிலை அறிக்கைகள் மீதான கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் வரவிருப்பதால் வரும் பட்ஜெட்டில் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய புதிய அறிவிப்புகள் மக்களை கவரும் வகையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தங்கம் தென்ன ரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
‘தடைகளைத் தாண்டி’ எனும் தலைப்பில் முத்திரைச் சின்னம் வெளியீடு
தமிழக அரசின் 2024-25 நிதிநிலை அறிக்கை திங்களன்று தாக்கல் செய்யப்படுவதையொட்டி, தடைகளைத் தாண்டி தலைப் பில் நிதிநிலை அறிக்கைக் கான முத்திரைச் சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதில், ““என்னருந் தமிழ்நாட்டின் கண்; எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங் கலை ஞானத்தால்; பராக்கிரமத்தால் அன்பால், உன்னத இமயமலை போல், ஓங்கிடும் கீர்த்தி எய்தி, இன்புற்றார் என்று மற்றோர், இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஏங்கிய காலம் நிறைவேறி; இன்று தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னணி மாநிலம்! மருத்துவத் துறையில் முன்னணி மாநிலம்! தொழில்துறையில் முன்னணி மாநிலம்! இந்தியப் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள முன்னணி மாநிலம்! வேளாண்மையில் முன்னணி மாநிலம்! விளையாட்டுத் துறையில், இளைஞர்தம் ஆற்றல் நிறைந்துள்ளதில் முன்னணி மாநிலம் – என எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு எத்திசையிலும் புகழ் பதித்துத் திகழ்கின்றது. ஏடும், நாடும் இதர மாநிலங்களும் இதற்குச் சான்று பதிக்கின்றன.
அதில், ““என்னருந் தமிழ்நாட்டின் கண்; எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங் கலை ஞானத்தால்; பராக்கிரமத்தால் அன்பால், உன்னத இமயமலை போல், ஓங்கிடும் கீர்த்தி எய்தி, இன்புற்றார் என்று மற்றோர், இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஏங்கிய காலம் நிறைவேறி; இன்று தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னணி மாநிலம்! மருத்துவத் துறையில் முன்னணி மாநிலம்! தொழில்துறையில் முன்னணி மாநிலம்! இந்தியப் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள முன்னணி மாநிலம்! வேளாண்மையில் முன்னணி மாநிலம்! விளையாட்டுத் துறையில், இளைஞர்தம் ஆற்றல் நிறைந்துள்ளதில் முன்னணி மாநிலம் – என எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு எத்திசையிலும் புகழ் பதித்துத் திகழ்கின்றது. ஏடும், நாடும் இதர மாநிலங்களும் இதற்குச் சான்று பதிக்கின்றன.
‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்துச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம்” என்று தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.