தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய மாநிலக்குழு அலுவலக திறப்பு விழா செவ்வாயன்று (பிப்.20) சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அலுவலகத்தை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு திறந்து வைத்தார். ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.