tamilnadu

கல்லூரிகளில் ஆக.9 முதல் இணையவழியில் வகுப்புகள்: அமைச்சர் பொன்முடி...

சென்னை:
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களைத் தவிர பிற மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகள் ஆக.9 ஆம் தேதி தொடங்க இருப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:-

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களைத் தவிர, இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இணையவழியில் ஆக.9ஆம் தேதி முதல் தொடங்கும்.இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கக் கூடிய வகையில் சிம் கார்டுகள் வழங்கப்படும். அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு, தேர்வுகளில் மதிப்பெண் கணக்கீடு செய்வது போல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பீட்டு முறை கொண்டுவருவது குறித்து மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அரசு பரிசீலிக்கும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

;