tamilnadu

எம்.பில்., படிப்பு தொடரும்: அமைச்சர் பொன்முடி பேட்டி...

சென்னை:
எம்.ஃபில்., பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகம் ரத்து செய்த நிலையில், அந்த படிப்பு தொடர்ந்து நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு பருவத் தேர்வுகள் நடத்துவது குறித்து  13 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், உயர்க்கல்வித்தறை அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஜூலை 1 அன்று அமைச்சர் க. பொன்முடி ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர்கள் மற்றும் இதர பணியிடங்களை நிரப்புவது, நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப் பட்டது.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “சென்னை பல்கலைக் கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.ஃபில்., படிப்பைத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது”என்றார்.பல்கலைக்கழகங்களில் நியமனங் களை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என்று துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

;