tamilnadu

img

உயர்கல்வியில் சேர்வதற்கு வரும் 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி

உயர்கல்வியில் சேர்வதற்கு வரும் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக இன்று அறிவிக்கப்பட்டது. மேலும் 22 ஆம் தேதி காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in,  http://www.dge.tn.nic.in  என்ற இணையதளங்களில், மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு எழுதலாம் என்றும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.   

இந்நிலையில் கல்லூரிகளில் சேர வரும் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தற்போது தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் பொன்முடி, பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர, ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்லூரிச் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடு அனைத்து கல்லூரிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார். 

 

;