ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்துள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கங்குலி நடிகை தமன்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணம் இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விளம்பரம் செய்யும் பிரபலங்களில் பலர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்தினர். பொதுமக்களில் பலர் அவர்களை பின்பற்றுகின்றனர் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
மத்திய மாநில அரசுகள் கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ், ராஜ் சுதீப் ரானா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.