tamilnadu

img

கூர்நோக்கு இல்லங்கள் மேம்பாடு

சென்னை,நவ.14-

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே துறைக்குச் சொந்தமான பேட்டரி ஒன்றைத் திருடியதாக கைது  செய்யப்பட்டு செங்கல்பட்டு அரசு  கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப் பட்ட கோகுல் என்ற 17 வயது சிறுவன் உயிரிழந்தார். கூர்நோக்கு இல்ல காவலர்கள் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு  இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் இடம்பெற்றிருந்தனர்.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து, கடந்த மே  மாதம் 2ஆம் தேதி முதல் பொறுப் பேற்றவுடன் கூர்நோக்கு இல்லங்கள்,  சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல் பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்த ஏதுவாக பொதுமக்கள் கருத்துக்கள் கோரப்பட்டது.

அதோடு மட்டுமல்லாது மேற்படி ஒரு நபர் குழுவானது மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு மேற்கொண்டது.

இந்நிலையில், நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவானது,  பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் நீதியரசர் ஆய்வின்  அடிப்படையில் முழுமையான அறிக்கை தயாரித்து, அதனை தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் நவ.14 அன்று வழங்கியது.

அதன்படி இதுகுறித்து ஆய்வு  செய்த நீதிபதி சந்துரு தலைமை யிலான குழு, அதற்கான அறிக்கையை  செவ்வாயன்று முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச் சரை சந்தித்து நீதிபதி சந்துரு அறிக்கையை சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில், “கூர்நோக்கு இல்லங்களில் கண்காணிப்பாளர் அல்லது உதவி கண்காணிப்பாளர் முன்னிலையில் சேர்க்கை நடைபெற வேண்டும், அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு அவர்கள் தங்குவதற்கு போதுமான ஆடைகள் வழங்கப்பட வேண்டும், சிறிய, தீவிரமான அல்லது கொடூரமான குற்றங்கள் அடிப்படையில் சிறுவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட வேண்டும், மேலும் வயது அடிப்படையில் 13 முதல் 16 வரை ஒரு குழுவாகவும், 16  முதல் 18 வயதிற்குள் மற்றொரு குழுவாகவும் பிரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.