tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரும் தொழிற்சங்கத் தலைவருமான பால்சந்திரா திரிம்பக் ரணதிவே (பி.டி.ரணதிவே) 1904 டிசம்பர் 19 அன்று மும்பையில் பிறந்தார். 

1928இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த இவர், மும்பையில் நடந்த இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முக்கியத் தலைவரானார். பின்பு, மும்பை ஜவுளித் தொழிலாளர்களின் கிரினி கம்கர் யூனியனிலும், ஜிஐபி ரயில்வே பணியாளர்கள் யூனியனிலும் செயல்பட்டார். 

1943இல் சிபிஐ-யின் மத்தியக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரை, 1948 பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் நடந்த கட்சியின் 2-ஆவது மாநாடு அதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. 1948 முதல் 1950 வரை இப்பதவியில் செயல்பட்டார். இவர் அதிதீவிர செயல்பாட்டினால் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 1956 இல் பாலக்காட்டில் நடந்த கட்சியின் 4-ஆவது மாநாட்டில் ரணதிவே மீண்டும் மத்தியக் குழுவிற்கு தேர்வானார்.  1962இல் இந்திய - சீன எல்லைப் பிரச்சனையின் போது, ஒன்றிய அரசால் சிறையில் அடைக்கப்பட்ட பல முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களில் இவரும் ஒருவர். 

1964இல் சிபிஐ-யிலிருந்து வெளியேறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ஐ அமைத்த அதன் முக்கியத் தலைவர்களில் ஒருவரானார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினரானார். 

1970 மே 28-31 அன்று கொல்கத்தாவில் நடந்த இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) ஸ்தாபக மாநாட்டில், பி.டி.ரணதிவே அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.