tamilnadu

img

கோடை விடுமுறையில் 19 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை, ஏப்.21- கோடை விடுமுறையை முன் னிட்டு 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்  பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; தெற்கு ரயில்வே சார்பில் 19  சிறப்பு ரயில்கள் 239 சேவைகளாக  இயக்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு  ரயில்கள் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து தெற்கு ரயில்வே மூலம் கர்நாடகா, ராஜஸ்  தான், பீகார், தில்லி, மேற்கு வங்கா ளம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்க ளுக்கு இயக்கப்படுகின்றன அதன்படி சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே  பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படு கிறது. அதேபோல, கன்னியா குமரி, நெல்லை, திருச்சி மற்றும்  தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு  பயணிகளின் வசதிக்காக தேர்தலை யொட்டி சிறப்பு ரயில்களையும் அறி வித்துள்ளது.

மேலும், இதைத்தவிர  பல புறநகர் ரயில்களும் இயக்கப் பட்டு வருகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு கோடைவிடுமுறையில் இந்தியா முழுவதும் மொத்தம் 6,369 சேவை கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த  ஆண்டு கூடுதலாக 2,742 சேவைகள்  இயக்கப்பட உள்ளது. கோடை காலங் களில் ரயில் நிலையங்களில் குடிநீர்  கிடைப்பதை உறுதிசெய்ய மண்டல்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது அனைத்து முக்கியமான ரயில்  நிலையங்களில் விரிவான பாது காப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. ரயில் நிலையங்களில் உள்ள  முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவும் பயணிகள் டிக்கெட் பெற்று கொள்ளலாம்.  

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.