tamilnadu

img

தமிழகத்தில் நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது  

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை (ஜன.23) அன்று  ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு என்பதால் அரசு பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து ஆம்னி பேருந்துகள் நாளை இயங்காது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள்(ஜன.24) முதல் வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாளை வெளியூரிலிருந்து வரும் பயணிகள் நலன் கருதி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் ஆட்டோக்கள் மற்றும் செயலில் மூலம் முன்பதிவு செய்யும் வாடகை செய்யும் கார்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

;