சென்னை, செப். 19- திமுக பொதுச்செயலாளர் பேராசிரி யர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக் கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அடுத்த மாதம் 6ஆம் தேதி ஞாயிறன்று காலை 10 மணிக்கு சென்னை யில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். சென்னை, இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பி னர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. கட்சி ஆக்கப்பணிகள், கட்சி சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரி விக்கப்பட்டுள் ளது. மு.க.ஸ்டாலின் திமுக தலைவரான பிறகு முதல் முறையாக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.