சென்னை, ஜூன் 27 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவொற்றி யூர் கிளையின் முன்னாள் தலைவர் கவியழகன் (எ) ஆசீர்வாதம் சனிக்கிழ மையன்று (ஜூன் 27) காலமானார். அவருக்கு வயது 60. 30ஆண்டுகளாக மாணவர்களுக்கு கட்டணமில்லா தனி பயிற்சி அளித்து பல ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கவியழகன். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் எண்ணூர் பகுதிக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.