tamilnadu

img

மூத்த புகைப்படக் கலைஞர் மறைவு

சென்னை,நவ.9- மூத்த புகைபடப் பத்திரி கையாளர், விகடன் முன்னாள் தலைமை புகைப்படக் கலைஞர் சு. குமரேசன் நவ. 8 அன்று மாரடைப்பு காரணமாக சென்னை யில் காலமானார். அவருக்கு வயது 58.

சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வந்த குமரசேன், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் புகைப்படக் கலைஞராக சிறந்த முறையில் பணியாற்றிய வர், விகடன் குழுமத்தின் தலைமை புகைப்படக் கலைஞராக பணியாற்றியவர். கார்கில் போரின் போது களத்திற்கு சென்று  புகைப்படங்கள் எடுத்தவர். தற்போது மற்றொரு ஊடகத்தில் அவர் பணியாற்றி வருகிறார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித் திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட இயக்க மேடைகளில் பகுத்தறிவு ஒளிவீசிய மகா மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர் பேரன் குமரேசன், கடந்த வாரம்,  தனது தாத்தாவின் பூர்வீக குடிகளின் பாவலர் முருகேச பாகவதர் படைப்பு நூல் வெளியீட்டு விழாவிற்கு அனைத்து ஊடக உறவுகளை அன்போடு அழைத்திருந்தார்.