tamilnadu

img

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மக்களவையில் குரல் கொடுப்பேன் வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி வாக்குறுதி

சென்னை, ஏப். 5- நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற  நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி தெரி வித்தார். வடசென்னை மக்களவைத் தொகு தியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலா நிதி வீராசாமி பெரம்பூரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், பெரம்பூர் எம்.கே.பி. நகர் சென்ட்ரல் அவென்யூ சாலையில் இருக்கும் புதிய விளையாட்டு மைதானத்தில் 2.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மரத்தளம், நடைபாதை, வெள்ளிப்புற உடற்பயிற்சி  உபகரணங்கள், உள்ளரங்க விளை யாட்டு ஷட்டில் கோர்ட் அரங்கம் ஆகி யவை அமைக்கப்பட்டுள்ளன.

கன்ன தாசன் நகர், முத்தமிழ் நகர் 2 பிளாக் மற்றும் 4ஆவது பிளாக், 36ஆவது வட்டம் எஸ்.ஏ.காலனி 8ஆவது தெரு, 33ஆவது வட்டம் இந்திரா காந்தி நகர், ஆகிய பகுதிகளில் 1.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடடங்கள் கட்டப்பட்டுள்ளன. 44ஆவது வட்டம் வியாசர்பாடி காமாட்சி தெருவில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம், உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப் பட்டுள்ளன. வியாசர்பாடியில் உள்ள மாநகராட்சி பள்ளி, எருக்கச்சேரியில் உள்ள பள்ளி ஆகியவற்றிற்கு 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேசை, இருக்கை, நாற்காலி ஆகியவை வழங்கப்பட்டுள் ளன.

இப்படி தொகுதி மேம்பாட்ட்டு நிதி மற்றும் தொழிற்சாலைகளின் சமூக பாதுகாப்பு நிதி என 6 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு பணிகள் செய்து கொடுத்து ள்ளேன். என்னை நீங்கள் மீண்டும் தேர்தெடு த்தால், மென்மேலும் இதுபோன்ற பணி களை தொடருவேன். அரசு நலத்திட் டங்கள் அனைவருக்கும் கிடைத்திட நட வடிக்கை எடுப்பேன் என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற, மாநில ஊரிமைகளை காக்க மக்களவையில் குரல் கொடுப்பேன் என்றும் கூறினார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. சேகர், வழக்கறிஞர் சரவணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், டி.கே. சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கோடீஸ்வரி, எம்.ராஜ்குமார், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் கு.வேம்புலி வெங்கடேசன், மதிமுக மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.