சென்னை, ஏப். 3- மாநில உரிமையை மீட்க திமுக விற்கு வாக்களிப்பீர் என்று வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீரா சாமி கொளத்தூர் தொகுதியில் பிரச்சா ரம் செய்தார். வடசென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கலாநிதி வீரா சாமி கொளத்தூர் 64ஆவது வட்டம், 69 ஆவது வட்டம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், கொளத்தூர் திக்காகுளம் பகுதியில் 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நவீன சலவைக் கூடம் அமைக்கப் பட்டுள்ளது. அரிதாஸ் தெருவில் உள்ள தாமரைக் குளத்தைச் சுற்றி 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சலவைத் தொழிலாளர் களுக்கு இஸ்திரிப் பெட்டிகள் வழங்கப் பட்டுள்ளன. கொளத்தூர் கிழக்கு ஜிகேஎம் காலனி, கோபாலபுரத்தில் உள்ள பள்ளி களுக்கு, கொளத்தூர் மேற்கு சீனிவாச நகரில் உள்ள பள்ளி, பாண்டர் கார்ட்டன் உள்ள பள்ளிகளுக்கு 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேசை, நாற்காலி உள்ளிட்ட தேவையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
எஸ்.ஆர்.பி. கோயில் தெருவில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூக நல கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து பெறப்பட்ட சமூக பொறுப்பு நிதி என 2 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு பணிகள் நடைபெற்றுள்ளன. என்னை மீண்டும் தேர்ந்தெடுத்தால் கொளத்தூர் பகுதி யில் ஏற்படும் போக்குவரத்து நெரி சலைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம் படுத்தப்படும்.
அரசின் நலத்திட்டங்கள் உரிய முறையில் மக்களுக்கு சென்ற டைய நடவடிக்கை எடுப்பேன் என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்ட மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்புச் சட்டம் சிதைக்கப்படும், ஜனநாயகம் கேள்விக் குறியாகும். பெரு வெள்ளத்தின் போது, தமிழ்நாட்டை எட்டிக்கூட பார்க்காத பிர தமர் தற்போது அடிக்கடி வருகிறார்.
தமிழ்நாட்டு மக்கள் புத்திசாலிகள் யாரும் ஏமாற மாட்டார்கள் என்றார். வட சென்னையின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளது. சிறப்பு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்யாத பாஜகவையும், ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்த அதிமுகவும் அகற்றப்பட வேண்டும். எனவே நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, திமுக பகுதிச் செய லாளர்கள் ஏ.நாகராஜன், வ.முரளி தரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், பகுதிச் செயலாளர் பா.ஹேமா வதி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு, சிபிஐ மாவட்டச் செய லாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, மதிமுக பகுதிச் செயலாளர் ஞானம், விசிக மாவட்டச் செயலாளர் அப்புன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.