ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்று தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான வழக்கு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் மட்டுமே அனுமதி பேரணிக்கு அனுமதி என்று நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து,
23 இடங்களில் உள்ளரங்கு கூட்டம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்க தயார் என்றும், மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும், நவம்பர் 6-ஆம் தேதி பல இடங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நவம்பர் 4-ஆம் தேதி இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.