tamilnadu

img

தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு இல்லை  

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இன்று ஒரு உயிரிழப்பு கூட இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பலரும் உயிரிழந்தனர். நாடு முழுவதும் தொற்று அதிகரித்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 பேர், மொத்த எண்ணிக்கை 34,51,710 பேர்.

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 327 பேர், மொத்த எண்ணிக்கை 34,12,226 பேர்.

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,241 பேர், மொத்த எண்ணிக்கை 6,49,21,412 பேர்.

மேலும் தமிழ்நாட்டில் இன்று ஒரு உயிரிழப்பும் இல்லை. தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 38,023 பேர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

;