தி.மலையில் தொற்று 8 பேர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமையன்று (மே 30) 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது.
நகை, பணம் கொள்ளை
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வேப்பூர் அருகே ஜா.ஏந்தல் கிராமத்தில் வசிக்கும் சுப்பிரமணியன் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகைகள், 30 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சிறுபாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி கொலை வழக்கில் 2 பேருக்கு குண்டாஸ்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ (15) கடந்த 10 ஆம் தேதி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே ஊரை சேர்ந்த முருகன், கலியபெருமாள் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.
விலங்குகளை வேட்டையாடியவர் கைது
வேலூர்மாவட்டம் குடியாத்தம் அருகே வன பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி அதந் இறைச்சியை விற்பனை செய்த பொகலூர் பகுதி கிடங்கு கிராமத்தை சேர்ந்த மார்கண்டனை வனத்துறையினர் கைது செய்து, அவனிடமிருந்த நாட்டு துப்பாக்கி, 16 நாட்டு வெடிகுண்டு, கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
சுய உதவிக்குழுக்களுக்கு கடன்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பாண்டிய நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் புலிவலம், சோமசமுதிரம், பாண்டிய நல்லூர் ஊராட்சி
களில் உள்ள 75 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா 1 லட்சம் வீதம் 75 லட்ச ரூபாய் கடன் வழங்கப்பட்டது.