புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மெரினா, பெசன்ட் நகர், எலியட்ஸ் உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை, போர் நினைவுச் சின்னம் முதல் காந்தி சாலை வரை வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காமராஜர் சாலை, பெசன்ட் நகர் கடற்கரை ஒட்டிய சாலைகளில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் வெளியே ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ரிசார்டுகள், பண்ணை வீடு, அரங்குகள், கிளப்களில் வர்த்தக ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், கேளிக்கை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் ஒன்று கூடி புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.