tamilnadu

img

தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ்

சென்னை, மே 21 - தமிழகத்தில் பி ஏ-4 என்ற புதிய  வகை கொரோனா வைரஸ் கண்டறி யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சனிக் கிழமையன்று (மே 21) செய்தியா ளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கொரோனா வைரஸ் பலவகையாக உருமாறி பரவிக்கொண்டே வருகிறது.  ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா, கப்பா என நிறைய உரு மாற்றம் நிகழ்ந்துவிட்டது. இறுதியாக ஒமைக்ரான் வந்தது. அதிலும் பி ஏ 1 பி ஏ 2 என்று 7 வகை வைரஸ்கள் உலகம் முழுவதும் பரவுவதாக கூறினார்கள். தமிழகத்தில் இதுவரை பி ஏ 1 மற்றும் பி ஏ 2 மட்டும் தான் வெளிப்படையாகத் தெரிந்தது. தமிழகத்தில் தற்போது பி ஏ 4 கண்டறியப்பட்டுள்ளது” என்றார். தமிழகத்தில் இரண்டு மூன்று  பேருக்கு தொற்று ஏற்பட்டால், உடனடி யாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

அதன் அடிப் படையில் இங்குள்ள மர பணு பகுப்பாய்வு கூடத்தில் செய்யப் பட்ட சோதனை மூலம் இது கண்டறி யப்பட்டுள்ளது. அவ்வாறு மேற் கொள்ளப்பட்ட ஆய்வில், செங்கல் பட்டு மாவட்டம் நாவலூரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது.  உடனடியாக  மாதிரிகளை மரபணு  ஆய்வுக்கு அனுப்பியதில் ஒருவருக்கு,  அது பி ஏ 4-ல் ஒரு வகை என்பதும், மரபணுவில் ஒரு உருமாற்றம், புதிய  வகை வைரஸ் என்பது கண்டறியப் பட்டுள்ளது. இது ஒமைக்ரானில் ஒரு புதுவகை. ஒமைக்ரானில் உள்ள 7  வகைகளில் இதுவும் ஒன்று, 4-வது  வகையைச் சேர்ந்தது. இந்த வகையான  தொற்று ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டி ருக்கிறது. அதைத்தான் அங்கு 4-வது  அலை, 5-வது அலை என்று குறிப்பிட்ட னர் என்றும் அமைச்சர் கூறினார்.