tamilnadu

img

கோவிந்தவாடி அரசு பள்ளியில் ரூ.6.87 கோடியில் புதிய பள்ளி

கோவிந்தவாடி அரசு பள்ளியில்  ரூ.6.87 கோடியில் புதிய பள்ளி

காஞ்சிபுரம், மே 24- காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டிட பணியினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 22 வகுப்பறை, 2 ஆய்வகம், குடிநீர் வசதி, சுற்றுசுவர் கட்டுதல் மற்றும் 2 கழிப்பறையுடன் கூடிய ரூ6,87,19,398/ மதிப்பீட்டில் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 12 வகுப்பறை கட்டடங்கள் இரண்டு தளங்களுடன் மொத்தம் 883.53 சதுர. மீட்டர் (9507 சதுர அடி) மற்றும் 10 வகுப்பறை கட்டடங்கள் இரண்டு தளங்களுடன் மொத்தம் 756.27 சதுர.மீட்டர் (8138 சதுர அடி) கொண்டதாகவும், ஆய்வகம் தரைத்தளம் மற்றும் முதல் தளங்களுடன் மொத்தம் 282 282 சதுர. சதுர, மீட்டரும் (3034 சதுர அடி) ஆண்கள் & பெண்கள் கழிவறை ஒவ்வொன்றும் 31 சதுர. மீட்டரும் (333 சதுர அடி) பள்ளி சுற்றுச்சுவர் 375 மீ (1230 அடி) அளவிலும் கட்டப்படவுள்ளன. இதற்கான கட்டுமான பணியினை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சி புரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், முதன்மைக் கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார், காஞ் சிபுரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ச.சோமசுந்தர் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.