tamilnadu

img

உளுந்தூர்பேட்டையில் புதியதாக அரசு கல்லூரி தொடக்கம்

உளுந்தூர்பேட்டையில்  புதியதாக அரசு கல்லூரி தொடக்கம்

மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பெரும் வெற்றி 

கள்ளக்குறிச்சி, ஜூன் 20-  தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை சார்பில் 2025-26 ஆம் கல்வி ஆண்டு முதல் செயல்படும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் உளுந்தூர்பேட்டை ஏ.ஜே.மணிகண்டன், சங்கராபுரம் தா.உதயசூரியன் ஆகியோர் உளுந்தூர்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முறைப்படி துவக்கி வைத்தனர். இதையடுத்து, கல்லூரியின் சிறப்பு பிரிவுக்கு கலந்தாய்வு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் துணை ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், கல்லூரியின் புதிய முதல்வர் கு.செல்வராஜ், உளுந்தூர்பேட்டை நகரமன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன், உளுந்தூர் பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர்கள் பி.ராஜவேல், அலெக்சாண்டர், நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் உளுந்தூர்பேட்டை நகர முக்கிய பிரமுகர்கள்கலந்து கொண்டனர். முழுக்க, முழுக்க கிராமப்புறங்களை உள்ளடக்கிய உளுந்தூர்பேட்டையில் அரசு கல்லூரி தொடங்க வேண்டும் என்று     தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, புதிதாக கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.