சென்னை:
தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கையை அமல் படுத்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச் சர் கே.பி.அன்பழகன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் வகையில், உயர்கல்வி நிறுவனங்கள் நிர்வாக சீரமைப்புப் பணிகளை துவங்க பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து உயர்கல்வி செயலாளர் அபூர்வா உள்ளிட்ட அதிகாரிகளுடன், தலைமைச் செயலகத்தில் அமைச் சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை நடத்தினார்.முதலமைச்சருடனான ஆலோசனைக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க் கப்படுகிறது.