tamilnadu

கட்டுக்கட்டாக புது 2000 ரூபாய் நோட்டுக்கள்... சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்லையாம்... மோடி அரசின் சிபிஐ புலனாய்வின் லட்சணம்

சென்னை:
சட்டவிரோதமாக, புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாக  தொழில் அதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்டோர்க்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால்  வழக்கை கைவிடுவதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

\வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்தக்காரர் மற்றும் தொழில் அதிபரான சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர்,ஆடிட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு 2016 ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில்,  பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும்,  புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும்,  178 கிலோ தங்கம் உள்ளிட்ட சுமார் 247  கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டாதக தெரிகிறது. இதன் மூலம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்க துறை சார்பில் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது.

பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான 24 நாட்களில் எப்படி கோடிக்கணக்கான ரூபாய் மாற்றப்பட்டது என்பது குறித்து சரியாக சேகர் ரெட்டி உள்ளிட் டோர்  பதிலளிக்க வில்லை. இதுகுறித்து சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்து, சேகர் ரெட்டி, பிரேம்குமார், சீனிவாசலு திண்டுக்கல் ரத்தினம், புதுக் கோட்டை ராமசந்திரன் உள்ளிட் டோரை கைது செய்தது. ஆரம்ப கட்ட விசாரணையின் முடிவில்,  மோசடியான வகையில் புதிய ரூபாய் நோட்டுகள் மாற் றப்பட்டது, ஊழல் தடுப்பு சட்டத் தின் கீழ் சட்டத்துக்கு புறம்பாக வருமானம் சேர்த்தது ஆகிய குற்றச் சாட்டுகள் கீழ் இவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது விசாரணை நடத்தி வந்தது.இந்த நிலையில் சென்னையில் உள்ள சிபிஐ சார்பில்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், சேகர் ரெட்டி உள்ளிட்டோர் எதிரான குற்றச் சாட்டு குறித்து 170 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.  மற்றும் 879 ஆவணங்களை ஆய்வு செய்ததில்  இந்த வழக்கில்  தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு   போதுமான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இல்லை. எனவே  இந்த வழக்கை நடத்துவதில் இருந்து கைவிடலாம் எனவும் தொடர்ந்து  வழக்கை நடத்தாமல் முடித்துக் கொள்ளலாம் எனவும் சிபிஐ சார்பில் தாக்கல் செய் யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜவகர், சேகர் ரெட்டி உள்ளிட்டோர் எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். மேலும் விசாரணை காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் ஆவணங்களை திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டார்.