tamilnadu

img

மலையடிவார குடியிருப்புகளை அகற்றுவது குறித்த பேச்சுவார்த்தை

மலையடிவார குடியிருப்புகளை அகற்றுவது குறித்த பேச்சுவார்த்தை

திருவண்ணாமலை, ஜூன் 19- சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி, திருவண்ணாமலை நகரம் அண்ணா மலையார் மலையில் அனுமதியின்றி ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றுவது தொடர்பாக திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடை பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் திரு வண்ணாமலை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அலு வலர்கள் மற்றும் அண்ணாமலையார் மலை அடிவாரத்தில் குடியிருக்கும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட 25 பேர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் போது நீதிமன்ற தீர்ப்பு செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் எடுத்துரைத்தார். எனினும், மலை அடிவாரத்தில் குடியிருப்போர் அனைவருமே தாங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவ்விடத்திலேயே குடியிருந்து வருவதால், அனைத்தும் திருவண்ணாமலை நகரப்பகுதியை  நம்பி இருப்பதால் தங்களை தற்போது குடி யிருக்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டாம் எனவும், குடியிருப்புகளை வரன்முறைப்படுத்தி பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.