சென்னை, டிச. 17- தொடர் கனமழை எதி ரொலியாக 100 பேர் கொண்ட 4 குழுக்கள் மீட்பு, உபகர ணங்களுடன் திருநெல் வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங் களுக்கு விரைந்துள்ளது.
குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டினம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியா குமரி உள்ளிட்ட தென் மாவ ட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தென் மாவட்டங் களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத் துள்ளது.
இந்நிலையில் திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட் டங்களில் இரவு முதல் இடை விடாத மழை பெய்து வரு கிறது. திருநெல்வேலி மாவ ட்டத்தை பொறுத்தவரை மாநகர பகுதிகளில் நள்ளி ரவு முதல் விட்டு விட்டு மழை பதிவாகியுள்ளது. அதே போல் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதி கன மழைக்கு வாய்ப்பு இருப்ப தாகவும் எச்சரிக்கை விடுக்க ப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொண்டுள் ளன. திருநெல்வேலி மாவட்டத்தின் புறநகர் பகுதி களிலும் தென்காசி மாவட் டத்தின் பல்வேறு பகுதி களிலும் சனிக்கிழமை இரவு முதல் மழை பெய்து வரு கிறது.
அதேபோல் அம்பாச முத்திரம், கல்லிடைக்குறிச்சி , விக்கிரமசிங்கபுரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் இடைவிடாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பொதுமக்களுக்கு அறிவுறு த்தல்களை வழங்கியுள்ளார். நீர்நிலைகளுக்கு அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் முன்னெ ச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத் திருக்கிறார்.
இடைவிடாத மழை எதி ரொலியாக நெல்லை, கன்னி யாகுமரி, தூத்துக்குடி மாவட் டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டதின் பேரில் முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இதில் 100 பேர் கொண்ட 4 குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் விரைந் துள்ளனர்.